ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானி கராலயத்தின் நிதியில் திருகோணமலையில் இயங்கிவந்த சர்வதேச குடியேற்ற அலுவலகம் நேற்று மூடப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து நடத்துவதற்கு உரிய நிதி வசதி இல்லாமல் இருப்பதே இவ் மூடுவிழாவுக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும் உண்மைக் காரணங்கள் எவையும் கூறப்படவில்லை. (more…)
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் திருகோணமலையில் மூடப்பட்டது.
கப்பல் முற்றுகையிடப்படும்! பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு.
ஈழத் தமிழர்கள் உட்பட சுமார் 200 இற்கும் அதிகமானவர்களுடன் வந்து கொண்டிருக்கும் தாய்லாந்து சரக்குக் கப்பலான எம்.சீ.சன்.சீ கனேடிய கடலை அடைந்ததும் முற்றுகையிடப்படும் என்று கனேடிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. (more…)
ஊடகங்களுக்கெதிரான காட்டுமிராண்டித்தனம்-திகாம்பரம் எம்.பி.
நாட்டு மக்களுக்கு உடனுக்கு உடன் செய்திகளை வழங்கி மக்களுக்குப் பணியாற்றுகின்ற ஊடகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவங்களை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார். (more…)
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் தீ
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் இன்று காலை ‘கராஜ்’ ஒன்றில் ஏற்பட்ட தீயினால் இரு கார்கள் கடும் சேதங்களுக்குள்ளாகின.
யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம்:மன்மோகன் சிங்
யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் நேற்று முன்தினம் இடம்பெற்று முடிந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (more…)
உள்ளம் சிவந்தன் உணர்வு சிவந்தன்
உள்ளம் சிவந்தது அன்று
உணர்வு சிவந்தது நேற்று
பாதம் சிவந்தது இன்று – இவனோ
வீரம் செழித்துச் சிவந்தன்
*** (more…)
7வது நாளாக தொடரும் சிவந்தனின் ஐ.நா நோக்கிய மனிதநேயப் பயணம்
தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். (more…)
யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஊடகம் மீது அராஜகமா? – அரியநேந்திரன் எம்.பி.
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பல்வேறு ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்ட அதேவேளை, ஊடகவியலாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் ஏற்பட்ட பின்னரும் இவ்வாறு ஊடகங்களுக்கு எதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்து விடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
(more…)
தமிழ் இளைஞனின் சிறுநீரகம் இரு சிங்களவர்களுக்கு மாற்றீடு!
மூளை செயலிழந்து உயிரிழந்த தமிழ் இளைஞன் ஒருவரின் சிறுநீரகத்தை இரண்டு சிங்கள நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யும் சத்திர சிகிச்சை கண்டி பொது வைத்தியசாலை வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது. (more…)
சிவந்தனுக்கு வைகோ வாழ்த்து.
ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும், போர்க்குற்றச்சாட்டின்பேரில்இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரியும் பாரிஸ் நகரிலிருந்து ஜெனீவா நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ஈழத் தமிழர் சிவந்தனுக்கு ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். (more…)
விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்த முடிவு : இலங்கை அரசு அறிவிப்பு
|
|
வெள்ளைக் கொடி வழக்கு:பொன்சேகாஇன்று ஆஜரானார்
வெள்ளைக் கொடிகளுடன் யுத்தத்தின் இறுதி நாட்களில் அரச படையினரிடம் சரண் அடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளைப் படுகொலை செய்ய வேண்டும் என்று பாதுகாப்பமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார் என்று சண்டே லீடர் பத்திரிகைக்கு பேட்டியளித்திருக்கின்றார் (more…)
சிவந்தனின் மனிதநேயப் பயணம் கடும் வெயில், காற்றின் மத்தியில் தொடருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேயப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் கடும், வெயில் மற்றும் காற்றின் மத்தியில் மிகுந்த சிரமத்துடன் தன்னுடைய நடை பயணத்தை உறுதி தளராது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். (more…)
பரமேஸ்வரனின் வழக்கு வெற்றி!
தமிழீழத்தில் போர் நிறுத்தப்படவேண்டும் என்றும் சர்வதேச சமூகம் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரி ஈழத்தமிழன் சுப்ரமணியம் பரமேஸ்வரன் லண்டனில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின்போது அவர் உணவு உட்கொண்டிருந்தார் என்று அந்நாட்டின் பிரபல பத்திரிகைகள் இரண்டு வெளியிட்ட செய்திக்கு எதிரான பரமேஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு வெற்றியீட்டியுள்ளது. (more…)
சிறையில் சீமானுடன் ஆலோசனை.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஐகோர்ட் இந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
(more…)
கருணா தலைமையில் அபிவிருத்திக் குழுக் கூட்டம்.
மட்டகக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற (more…)
விடுதலையைக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் கடிதம்!
எங்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜனாதிபதி உட்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு எங்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அல்லது பிணை கிடைக்க வழி செய்யுங்கள்.”
இப்படி உருக்கமாகக் கோரி தமிழ் அரசியல் (more…)
புலிகள் இயக்கத்துக்கு உதவிய சிங்களவர்கள் இருவருக்கு 11 வருட கடூழிய சிறை.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைப் படுகொலை செய்கின்றமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு தகவல்களை வழங்கி இருந்தனர் என்கிற வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட சிங்களவர்கள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 11 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தது. (more…)
சிவந்தன் 5வது நாளாக ஐ.நா நோக்கிய நடை பயணத்தைத் தொடருகின்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 5வது நாளாக தனது பயணத்தை அதே உற்சாகத்துடன் தொடர்ந்து வருகின்றார். இருப்பினும் அவரது காலில் அவ்வப்பொழுது வலி ஏற்படுவதை அவரது நடையில் இருந்து அவதானிக்க முடிவதாக அங்குள்ள உதவியாளர்கள் அறியத் தந்துள்ளனர். (more…)
யுசூசி அகாசியுடன் ஜீ.எல்.பீரிஸ்,பசில் ராஜபக்ஷ ஜப்பானில் சந்திப்பு.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரது ஜப்பானுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கான விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். (more…)
மன்னாரில் அழிவடைந்து வரும் இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள்.
மன்னார் மாவட்டத்தில் மடுவில் இருந்து மன்னார் செல்லும் பிரதான வீதியில் உள்ள பல பிரசித்தி பெற்ற தொன்மையான இந்து , கிறிஸ்தவ தேவாலயங்கள் பாழடைந்த நிலையில் கவனிப்பாரின்றி புனரமைக்கப் படாமல் உள்ளன. (more…)
, தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பிவைப்பு!
வேலணை அரச வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் பதில் கடமையாற்றியபோது திடீர் மரணம் அடைந்த குடும்ப நலப் பணியாளர் எஸ்.தர்ஷிகாவின் சடலம் கைதடி கிழக்கில் உள்ள ஊற்றல் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதியதொரு மரண பரிசோதனைக்காக இன்று காலை 8.00 மணியளவில் தோண்டியெடுக்கப்பட்டது. (more…)
வெள்ளைக் கொடி விவகாரம் நாளை விசாரணை.
இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான விசாரணைக் குழுவிற்கு ஜெனரல் சரத் பொன்சேகாவை நாளை சமூகமளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
(more…)
இலங்கையர் அறுவர் அமெரிக்காவில் கைது.
அமெரிக்க பொலிஸார் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என சந்தேகிக்கப்படும் 6 இலங்கையர்களை செவ்வாய் காலை கைது செய்துள்ளனர். (more…)
பிரான்ஸ் தமிழ் மக்களே! சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் இணையுங்கள்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நான்காவது நாளாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனுடன் பிரான்ஸ் தமிழ் உறவுகள் இணைந்துகொள்ள வேண்டும் என, அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன. (more…)
அன்று எரித்த தீயே…..!!
இலங்கை எரித்த தீயே..!
சீதை கரங்கொண்டோன் தூதன் அனுமந்தின்
வாலினில் பற்றியவன்
தூதைப் பழித்திடக் கோபங் கொண்டேயிந்த
தீவை அழித்துநின்றாய்
மாதைத் தமிழ்ச்சிறு மங்கை மானமழித்
தாடிக் குதிப்பவர்கள்
நீதிகேட்டே இந்த நீசர்கள் பூமியில்
மீண்டும் எரிவாயோ?
(more…)
கே.பிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது முட்டாள்தனமானது -பிரதியமைச்சர் முரளிதரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அதிக முக்கியத்தும் கொடுத்து பேசுவது முட்டாள்தனமானது என மீள்குடியேற்ற விவகார பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ‘தமிழ் மிரர்’ இணையத்தளத்திற்கு அளித்த விசேட நேர்காணலில் கூறினார். (more…)
வவுனியா வர்த்தகர்கள் ஹர்த்தால்
வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தலை கண்டித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் இன்று காலையில் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். (more…)
கனடா வருகின்ற கப்பல் இடையில் முற்றுகை இடப்படலாம்!
ஈழத் தமிழ் அகதிகள் சுமார் 200 பேருடன் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது என்று கூறப்படும் தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பலான எம்.பி.சன்.சீ கனேடிய கடற்பரப்பை அடைவதற்கு முன் முற்றுகையிடப்படலாம் என்று புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
சர்வகட்சி குழுவின் ஆலோசனையை ஏற்று தமிழரின் தேசியப் பிரச்சனையை தீர்க்க முடியுமா?அனலை நிதிஸ் ச. குமாரன்
உலகையும் குறிப்பாக இந்தியாவையும் தமிழரையும் ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்டது தான் சர்வகட்சி குழு. இந்த குழுவின் தலைவராக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவினால் நியமிக்கப்பட்டவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண. இவர் மகிந்தா அரசில் அமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்த சர்வகட்சிக் குழுவில் பல கட்சிகள் இடம்பெற்று இருந்தாலும் இறுதியில் 13 கட்சிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு ஆலோசனையை அரசிடம் வழங்கியிருந்தது. (more…)
இலங்கை செல்கிறார் இந்திய அதிகாரி.
ஐ.நா நோக்கிய நடை பயணம் – சிவந்தன் காலையில் டோவரை சென்றடைவார்.
கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பெண்கள்-
இலங்கையின் வடக்கே போர் நடைபெற்ற வன்னிப்பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் பல பெண்கள் ஈடுப்பட்டுள்ளனர்.யுத்தச் சூழலில் கணவரை இழந்த பெண்கள், தடுப்புக்காவலில் கணவனைப் பிரிந்துள்ள பெண்கள், கணவன் காணாமல் போனதால் தனித்து வாழும் பெண்கள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு எவ்எஸ்டி நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். (more…)

































