user online 
sugi


http://www.4tamilmedia.com/aananthi/saraswathi/

ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

ஊடக அடக்கு முறைக்கு எதிராக இன்று மதியம் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் ஊடகங்களுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் முடுக்கிவிடப்பட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. Read more…

Be the first to comment - What do you think?  Posted by admin - 08/02/2010 at 9:39 pm

Categories: இன்றைய செய்திகள்   Tags:

ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் கைது.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment - What do you think?  Posted by admin - at 9:33 pm

Categories: இன்றைய செய்திகள்   Tags:

சிறிலங்காவில் மறுக்கப்படும் கருத்துச் சுதந்திரம் – ஊடகவியலாளர்கள்

ஜனாதிபதியின் வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தெரியவந்தது. இது இலங்கையின் ஜனநாயகத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் பாரதூரமான தாக்குதலாகும். இந்த நிலைமையை மாற்றத் தவறினால் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாரதூரமான ஆபத்தை எதிர்நோக்கக் கூடும் என ஒடுக்குமுறைக்கெதிரான ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். Read more…

Be the first to comment - What do you think?  Posted by admin - at 9:50 am

Categories: இன்றைய செய்திகள்   Tags:

ஆளும் கட்சியிலோ,எதிர்கட்சியிலோ போட்டியிடும் எண்ணம் இல்லை:சிவாஜிலிங்கம்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியுடனோ அல்லது எதிர்க் கட்சியுடனோ இணைந்து போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் எமக்கு மேலும் தெரிவிக்கையில்,” ஆளும் கட்சியுடனோ, அல்லது எதிர்கட்சியுடனோ இணைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. Read more…

Be the first to comment - What do you think?  Posted by admin - at 9:40 am

Categories: இன்றைய செய்திகள்   Tags:

பாராளுமன்றம் நாளை கலைப்பு; ஏப்ரல் 9 ஆம் திகதி பொதுத்தேர்தல்

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தங்கள் ஏற்கனவே செய்யப்பட்டு வருகின்ற போதும், தேர்தல் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பெரும்பாலும் இப்பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி நடக்கும் எனவும், தற்போதுள்ள பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை நள்ளிரவில் வெளியாகும் என்றும் அரசாங்க உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Read more…

Be the first to comment - What do you think?  Posted by admin - at 9:36 am

Categories: இன்றைய செய்திகள்   Tags:

தேர்தல் தினத்தன்று நள்ளிரவு இடம்பெறவிருந்த இரத்தக்களரியில் இருந்து மயிரிழையில் தப்பியது தலைநகரம்

சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றிபெற்றிருந்தால் அவருக்கு ஆதரவான சிங்க படையணியையும், கொமோண்டோ படையணியையும் அழித்து ஆட்சியை கைப்பற்ற சிறப்பு படையணியும், கஜபா படையணியும் தயார் நிலையில் இருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: Read more…

Be the first to comment - What do you think?  Posted by admin - 07/02/2010 at 10:01 am

Categories: இன்றைய செய்திகள்   Tags:

சனல் 4 பெரும் நெருக்கடியில்: அதிர்சித்தகவல்

கடந்த வருடம் பிரித்தானியத் தொலைக்காட்சி சனல் 4 ஒளிபரப்பிய இலங்கை இராணுவத்தின் படுகொலைக் காட்சிகளின் பின்னர், அது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்துத் தொலைக்காட்சிகளையும் கட்டுப்படுத்தும் அல்லது நெறிப்படுத்தும் ஸ்தாபனமாக விளங்கும் ஓப்காம்(OFCOM) நிறுவனத்திடம் இலங்கை பல பாரதூரமான முறைப்படுகளை மேற்கொண்டுள்ளதாக அறிகிறது. Read more…

Be the first to comment - What do you think?  Posted by admin - at 9:59 am

Categories: இன்றைய செய்திகள்   Tags:

பிரபாகரன் மறைந்திருந்த இடத்தில் ஆவணங்களை கண்டுபிடிப்பாம்

வன்னியில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை போலீசின் சிறப்பு அணி கண்டுபிடித்துத் தேடுதல் நடத்தியுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த இந்த மறைவிடத்திலிருந்து தாம் வகைப்படுத்தப்பட்ட பல தகவல்களைக் கொண்டுள்ள கோப்புகள் பலவற்றையும், 56 சி.டி க்களையும் பெருமளவான புதியவகை ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக போலீஸ் மேலும் கூறியுள்ளது. தலைவருக்கு அருகில் இருந்த ஆறு பேர் தற்போது தமது விசாரணையின் கீழ் உள்ளதாகவும், Read more…

Be the first to comment - What do you think?  Posted by admin - at 9:55 am

Categories: இன்றைய செய்திகள்   Tags:

ஐ.நாவின் குற்றச்சாட்டை அமைச்சர் முரளீதரன் மறுக்கிறார்

தமது நெருங்கிய சகாவான, இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை, தேசிய இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துறை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மறுத்துள்ளார்.

தம்மை ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் மற்றும் ஆயுதப் பயன்பாடு தொடர்பான பிரதிநிதி பற்றிக் கம்மேட் அவர்களைச் சந்தித்த போது, இனியபாரதி அவ்வாறான சிறுவர்களை படைகளில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை அவருக்கு தெரிவித்ததாக அமைச்சர் முரளீதரன்குறிப்பிட்டுள்ளார். Read more…

Be the first to comment - What do you think?  Posted by admin - at 9:52 am

Categories: இன்றைய செய்திகள்   Tags:

இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க நியமனம்

பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை திங்கட்கிழமை முதல் இராணுவப் பேச்சாளருக்கான கட மையை அவர் பொறுப்பேற்கவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் உதய நாணயக்கார இராணுவத்தின் பிரதம களப்பொறியியலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் நாளை திங்கட்கிழமை முதல் அவரும் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.
Read more…

Be the first to comment - What do you think?  Posted by admin - at 9:50 am

Categories: இன்றைய செய்திகள்   Tags:

Recent Posts
RSS wintamil News
Archives
Archives

Next Page »

Publisher Webseite!