சுவிஸ் ஈழத்தமிழர் அவைக்கான தேர்தல் மார்ச் 28 ஆம் திகதி .
உலகத் தமிழ்ப்பெண்க்கள் பேரவை கோரிக்கை.
பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தக் கோரி கடந்த சனிக்கிழமை 06-03-2010 அன்று இலண்டனில் ஊர்வலத்தில் சென்ற பல்லாயிரக்கணக்கான பெண்களோடு உலகத் தமிழ்ப் பெண்கள் பேரவையும் (ஐ.இ.) கலந்துகொண்டது. (more…)
பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் அறிக்கை.
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை ஆதரித்து தமிழ் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் தமிழ் மக்களின் இலட்சியப் பாதையை நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்காகவும் அந்த இலட்சியத்தில் நம்பிக்கையற்றவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்ப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. (more…)
பிரித்தானிய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு.
உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மோதல்கள் முடிவடைந்த நிலையும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும் சிறந்த வாய்ப்பு என பீற்றர் றிக்கெட்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். (more…)
அரசின் விரோத செயல்களினால்சர்வதேச அழுத்தம்:ஐ.தே.க.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களினா லேயே சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐ.நாவின் நிபுணர் குழு அமைப்புக்கும் ஐ.தே.க. கண்டித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சி எதிர்ப்புத் தெரிவிப்பதாக கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் தயா சிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். (more…)
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை: ஜீ.எல்.பீரிஸ்.
ஜீ.எஸ்.பி. பிளஸ் குறித்தும் ஏனைய விடயங்கள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்வரும் வாரத்தில் இலங்கை குழுவொன்று பிரஸெல்ஸ் செல்லவுள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து கூறுகையில், (more…)
பொட்டு அம்மானுடன் தொடர்பு: சுங்க அதிகாரிகள் கைது
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணி அவருக்காகப் பணிபுரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இரு சுங்க அதிகாரிகள் கைதாகியுள்ளனர். விடுதலைப் புலி இயக்கத்தினர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. (more…)
சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் பதிலளிக்கவேண்டும்: மஹிந்த
சர்வதேச மட்டத்தில் இன்று எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வலஸ்முல்லவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெலிஅத்த தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(more…)
மனித உரிமைகள் விவகாரம்: மஹிந்த மீது மூன் புகார்
ஐ.நா: இலங்கையில் வல்லுனர் குழுவை அமைத்து மனித உரிமை மீறல் நடந்ததா, இல்லையா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளித்தால் தான் ராஜபக்ஷே அரசு சொல்வதை நம்பமுடியும் என, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் கண்டிப்புடன் கூறினார்.இலங்கையில் கடந்த ஆண்டு புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். (more…)
ராமதாஸ் காரை நிறுத்தி சோதனை.
இடைத் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் காரை துப்பாக்கி ஏந்திய போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றதையடுத்து பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
(more…)
நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் போராட்டம்
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் நாடாளுமன்றம் கூடிய வேளை சுலோகம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டார்.”பிரதமர் அவர்களே, கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி நகரத்தில் அராஜக ‘கமகே’ அரசியலை… (more…)
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டை ஐ.நா. சபையில் நிறைவேற்ற முடியாது
எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற முடியாதென அரசாங்கம் உறுதிபடத் தெரிவித் துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐக்கிய நாடு கள் சபையின் சட்ட விதிகளை மீறுவதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம்.
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் அமைக்க, இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. நிருபமா ராவ் 3 நாள் பயணம் மேற்கொண்டு இங்கு வந்திருந்தார். சுற்றுப்பயணத்தின் இறுதி தினமான திங்கட்கிழமை, செய்தியாளர்களிடம் கூறுகையில், (more…)
பண்டார வன்னியன் நினைவு சின்னம், இலங்கைப் படைகளால் சிதைப்பு
வன்னி மண்ணிலிருந்து வெள்ளையரை எதிர்கொண்ட மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னம் இலங்கைப் படையினரால் சிதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.1803-08-31 ம் ஆண்டு, தற்போதைய முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் பகுதியில், பண்டாரவன்னியனுக்கும், ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக் என்பவனுக்கும் பெருஞ்சமர் நிகழ்ந்ததாகவும், இந்த மோதலில் பண்டாரவன்னியன் கொல்லப்பட்டதாகவும், குறிப்பிட்ட நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்து. |
| (more…) |
ஜி.எஸ்.பி வரிச்சலுகையின் இடைநிறுத்தம் வறியவர்களயே பாதிக்குமாம்:பிரித்தானியா தூதுவர்
அண்மையில் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் கிளன்ஸ்ரோன் மண்டபத்தில் இடம்பெற்ற உலகத் தமிழர் அமைப்பினது கூட்டத்தில் நிழல் அமைச்சரவையின் துணை வெளிவிவகாரச் செயலர் வில்லியம் கேக் [William Hague] கலந்துகொண்டு உரை நிகழ்த்தியிருந்தார்.
(more…)
ஈழத்தமிழ் எதிலிப்பெண் தமிழகத்தில் தீக்குளித்து சாவு
தமிழகத்தில் ஈழஎதிலிப் பெண்ஒருவர் தீக்குளித்து இறந்துள்ளார். தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஈழத்தமிழர்களின் எதிலிகள் முகாம் ஒன்றில் இந்நிகழ்வு நடந்தேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை சில தமிழ் அமைப்புகள் தேடிவருகின்றன:போகொல்லாகம
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை சில தமிழ் அமைப்புகள் தேடிவருவதாக, போகொல்லாகம நிருபமா ராவிடம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் சில அமைப்புக்கள் வே.பிரபாகரன் எங்கு இருக்கிறார் எனக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். (more…)
ஜெனரல் சரத் கையடக்கத் தொலைபேசி பாவிக்க அனுமதி.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குக் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொன்சேகாவின் பாரியார் தனது கணவரைப் பார்க்கச் செல்லும்போது கையடக்கத் தொலைபேசியைக் கொண்டு செல்லலாம் என்றும் தனது பிள்ளைகளுடன் மாத்திரம் கதைப்பதற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். (more…)
மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி
மகளிரின் அபிமானம், கௌரவம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி பேன்றவற்றிற்கு தடையாக இருந்த பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத பிடியில் சிக்கி பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்த அனைத்து மகளிரையும் அதில் இருந்து மீட்டு அபிமான மிக்க மகளிர் பரம்பரையாக இலங்கை மகளிர் வாழ்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
(more…)
அனைத்துலக பெண்கள் தினமும் தமிழீழப்பெண்களும்:மார்ச் 8
அமைச்சர் டக்ளஸ் நிருபமா:சந்திப்பு
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் தங்கியிருக்கும் மக்களை இங்கு விரைவில் மீளக்குடியமர்த்து வதற்கு நிகழ்ச்சி நிரல் தயாரிக்க வேண்டும்.
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவ காரச் செயலாளர் நிருபமாராவைச் சந்தித்த போது சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா மேற்கண்டவாறு கேட்டுள்ளார். (more…)
இலங்கையில் எங்கும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடாது; மகிந்த அரசின் மறைமுக திட்டம்: இரா.சம்பந்தன்
இலங்கைத்தீவில் எந்த இடத்திலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடாது. அதற்கமைவாக மகிந்த அரசானது மறைமுகமான திட்டம் ஒன்றை வைத்து தமிழ் மக்களின் பிரதேசங்களை சிங்கள மயப்படுத்தி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.திருகோணமலையில் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். |
| (more…) |
உலகத் தமிழ் பேரவையின் தீர்மானத்தால் வலுவடையும் தமிழீழ அரசியல்
இலண்டனில் நடைபெற்ற மாநாட்டில் உலகத் தமிழ் பேரவை, 1976-ல் பிரேரிக்கப்பட்டு, 1977 தேர்தலில் தமிழீழம்தான் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என மொழியப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டதன் விளைவாக, ஐ.நா.வின் மேற்பார்வையுடன் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிலும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்களிடமும் ஓரு வாக்கெடுப்பு நடத்தவேண்டும் (more…)ராஜபட்சவுடன் நிருபமா ராவ் சந்திப்பு
இலங்கை அதிபர் ராஜபட்சவை இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இன்று சந்தி்த்துப் பேசினார். தமிழர்களின் மறுகுடியமர்த்தல் நடவடிக்கைகளில் இந்தியாவின் ஆதரவு தொடரும் என அப்போது ராஜபட்சவிடம் ராவ் உறுதி அளித்தார். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்ச வெற்றிபெற்ற பின்னர் இரு நாடுகளுக்கிடையே முதன்முறையாக உயர்மட்ட அளவில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதிபர் மாளிகையில் ராஜபட்சவைச் சந்தித்த ராவ், தேர்தலில் வெற்றிபெற்றதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.


























